மின்கட்டணம் அதிகரித்தால் மீண்டும் உயரப்போகும் விலை

30.01.2023 22:23:08

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை நிச்சயம் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (30ம் திகதி) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பேக்கரி தொழிலால் தாங்கவே முடியாது

தற்போது பேக்கரிகளின் மின் கட்டணம் தற்போதைய விலையை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறிய ஜெயவர்தன, மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தினால், பேக்கரி தொழிலால் அதை தாங்கவே முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், பாண் மாவு, முட்டை, மற்றும் பேக்கரித் தொழிலுக்குத் தேவையான இதர பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பேக்கரி தொழில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விலையை அதிகரிக்க வேண்டிய நிலை

மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இவ்வாறு நடந்தால், பேக்கரி தொழில் மேலும் வீழ்ச்சியடையலாம் எனவும் ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.