குறிஞ்சாக்கேணியில் கடற்படையினரால் இன்று முதல் படகு சேவை முன்னெடுப்பு

25.11.2021 05:53:33

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று முதல் படகு சேவையினை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்தப் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து அனர்த்ததிற்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாலத்தின் உரிமையாளர் உட்பட 3 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் திருகோணமலை பிரதான நீதிவான் முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த மூன்று பேரையும் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.