ஓரிரவு கொள்கை வீதத்தில் மாற்றமில்லை.
23.07.2025 08:55:26
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, நேற்று (22) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் எனும் அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரு அம்சங்களையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் இத்தீர்மானத்தினை மேற்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு, எதிர்காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை, வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென தாம் கருதுவதாகவும் நாணயக் கொள்கை சபை அறிவித்துள்ளது.