முட்டை உற்பத்தியாளர்களுக்கு எச்சரிக்கை!

24.07.2024 07:56:44

“முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாயாகக் குறைக்க முடியும்” என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டை விலை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” முட்டையின் விலையானது 6 ரூபாயினால்  குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கைகளையும் பெற்று வருகின்றேன். தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். 40 ரூபாய்க்கு கூட முட்டையினை  விற்பனை செய்ய முடியாவிட்டால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஏனெனில் பண்டிகை காலம் டிசம்பரில் தொடங்கும். கேக் தயாரிப்பாளர்கள் நிறைய முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு தேவையான முட்டைகள் இல்லை என்றால், முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்.

எனவே பண்டிகைக் காலத்தில் முட்டை விலையைக்  குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.