அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடர முடியாது.

25.08.2025 08:05:07

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, அணுசக்தி விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் ஒருபோதும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்று அலி கமேனி திட்டவட்டமாக கூறியுள்ளார். இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய 12 நாள் தாக்குதலே இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும், இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஆதரவாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அலி கமேனி மேலும் கூறுகையில், ஈரானின் அணுசக்தி திட்டம் என்பது தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை என்றும், அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கமேனியின் இந்த கடுமையான பதில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய மோதல் உருவாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.