
24 மணித்தியாலத்தில் 529 சாரதிகள் கைது!
02.01.2025 08:20:42
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைதுகள் இவையென பொலிஸார் தெரிவித்தனர். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தி தற்போது வரை 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது |