
போர் நிறுத்தம் குறித்து விளக்கமளிக்கவுள்ளார் விக்ரம் மிஸ்ரி
19.05.2025 08:41:27
இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்தியா – பாக்கிஸ்தான் இடையே இடையே கடந்த 10ஆம் திகதி திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது.
போர் நிறுத்தம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் எனவும் விவாதிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய நிலையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார்.
அவர் இந்தியா – பாக்கிஸ்தான் இடையே போர் நிறுத்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து முழு விளக்கத்தை வழங்குவார் என மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.