யாழ். மாநகர சபையின் ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்!

20.05.2026 08:38:21

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநரிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் புதிய ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். 

இந்த முக்கியத்துவமிக்க நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.