
ஆறு திருமுருகனைச் சந்தித்தார் கஜேந்திரகுமார்!
04.10.2025 13:42:48
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும் ஆன்மீகத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். |
அநுர அரசாங்கம் மிக விரைவில் கொண்டு வரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியலமைப்பின் ஆபத்துகள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு தெல்லிப்பளை துர்க்கையம்மன் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டார். |