வடக்கு அரச ஊழியர்களுக்கு பிரதமர் தினேஷ் பாராட்டு

15.07.2024 09:37:02

வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடாது, மக்களுக்காக பணியாற்றி வட பகுதியைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துக்கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, சமுதாயத்தை முன்னேற்றப் பாடுபட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக கொழும்பில் சில சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாண மக்கள் அவற்றில் இணையவில்லை. அதற்காக ஆளுநர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வழக்கம் போல் வேலைக்குச் சென்று, அன்றாடக் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர் என்றார்.  

வட மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் வௌ்ளிக்கிழமை (12) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நூலகத்திற்கும் இதன் போது நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

"எங்கள் வாழ்நாளில் வரலாறு காணாத பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டோம். நிதி நெருக்கடியை சமாளிக்கும் பணிக்கும் சவாலுக்கும் ஜனாதிபதியும் பிரதமராகிய நானும் எதிர்கொண்டோம். நாட்டை முன்கொண்டு செல்வதற்குத் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு பல மக்கள் பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகித்தனர். நெருக்கடியை தீர்ப்பதற்கு பெரும் பலமாக இருந்தனர்.

அன்று நாங்கள் பட்ட கஷ்டங்கள் யாழ். ஊழியர்களுக்கு தெரியும். அவர்கள் நெருக்கடியை படிப்படியாக தீர்க்க உதவினார்கள்.

கடந்த 24 மாதங்களில் பொருளாதார சவாலை வெற்றிகொள்ள நாட்டு மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவின் காரணமாக சர்வதேச அளவில் இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு சாதகமான வளர்ச்சியை அடைந்துள்ளோம். மேலும் அடைவுகளை நோக்கிப் பயணிக்க, நாம் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பைப் பின்பற்ற வேண்டும்.

நாங்கள் ஒரு நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் போது, நாங்கள் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம். அந்த வகையில் நமக்கு ஒரு கடமை இருக்கிறது. நமது உரிமைகளை நாம் கோர வேண்டும். ஆனால் அமைதியான முறையில் நமது உரிமைகளைப் பற்றி கலந்துரையாட முடியும் என்றார்.