அரசன் ஷூட்டிங் பற்றி கலைப்புலி தாணு விளக்கம்!
|
நடிகர் சிம்பு நீண்டகாலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர். அவருக்கும் வேல்ஸ் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது சிம்பு நடித்து வரும் அரசன் படத்தின் ஷூட்டிங் தடைபட்டு இருந்தது. தற்போது பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் அரசன் ஷூட்டிங்கில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. |
|
சிம்பு எப்போதும் ஷூட்டிங்கிற்கு லேட் ஆக தான் வருவார் என ஒரு குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. அது பற்றி அரசன் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கம் கொடுத்து இருக்கிறார். சிம்பு ஷூட்டிங்கிற்கு எப்போதும் லேட் ஆக வரவில்லை. ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுகிறார். அவரை ஏன் லேட் ஆக வருவதாக விமர்சிக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என தாணு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்துள்ளார். |