காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா காரியாலயம் முன் போராட்டம்

17.10.2022 10:04:32

வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனா்.

சர்வதேச விசாரணையை கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பகின்றது. ஆர்ப்பாட்டத்தில் பல தாய்மார்கள் கலந்து கொண்டு கதறி அழுத வண்ணம் பல்வேறு கோஷங்களை எழுப்பி தமது கோரிக்கையை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.