துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

10.05.2022 12:50:07

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வருகிற 15-ந் தேதி ஊட்டிக்கு வருகின்றனர்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வரும் வெங்கையா நாயுடு, அங்கிருந்து கோவைக்கு வருகிறாா். கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு வருகிறாா்.

அங்கிருந்து மற்றொரு ராணுவ ஹெலிகாப்டரில் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். மே 20-ந்தேதி வரை அவர் ஊட்டியிலேயே தங்கி இருக்கிறார். அவருடன் தமிழக கவர்னர் ஆா்.என்.ரவியும் ஊட்டிக்கு வருகிறாா்.

இருப்பினும் அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 20-ந்தேதி வரை ஊட்டியில் தங்கியிருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

கவர்னர் ஆர்.என்.ரவி மட்டும் வருகிற 24-ந்தேதி வரை ஊட்டியிலேயே தங்க உள்ளதாகவும், அன்று நடக்கும் மலர் கண்காட்சி நிறைவு நாளன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.