316 ஆக உயர்ந்துள்ள உயிரிழப்புக்கள்

02.08.2024 08:27:40

இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெய்த கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ளது.

மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், 3500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய ஆய்வு விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை (Risat star) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து , அதுகுறித்து தகவல்களை அறிவித்துள்ளது.

அதன்படி, மண்சரிவு சுமார் 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. மேலும் சிக்குண்டவர்களை thermal scanner உதவியுடன் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

 

அனைத்து பகுதியும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் மீட்புப் பணிகளில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஸ்கேனர் உதவியுடன் சிக்குண்டவர்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 1000க்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளதோடு, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.