
ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அது 82 வயதான அவரது எலும்புகளுக்கும் பரவியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பைடனுக்கு, சிறுநீர் அறிகுறிகளுக்காக கடந்த வாரம் மருத்துவரைச் சந்தித்த பின்னர் வெள்ளிக்கிழமை (17) புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
புரோஸ்டேட் – புற்றுநோய் என்பது புரோஸ்டேட் சுரப்பியில்/ முன்னிற்குஞ்சுரப்பியில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும், இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
2021-2025 ஜனாதிபதி பதவிக் காலத்தில் பைடனின் உடல் ஆரோக்கியம் மற்றும் மனக் கூர்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது பைடன் தனது தோல்வியைத் தழுவியது, சக ஜனநாயகக் கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்திய சில வாரங்களுக்குப் பின்னர், கடந்த ஜூலை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து திடீரென விலகினார்.
ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பைடனை பலமுறை திட்டி வரும் ஜனாதிபதி ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இட்ட ஒரு பதிவில், பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்லுக்கு அனுதாபம் தெரிவித்தார்.