திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலி!

23.11.2021 06:21:28

திருகோணமலை – கிண்ணியா, குருஞ்சங்கேனி பிரதேசத்தில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலியானதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பகுதியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வருவதால் அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மோட்டார் இழுவை படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

அத்துடன் மேலும் சிலர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபத்தில் பலர் மரணித்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படும் நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.