திடீரென சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி !

22.07.2021 10:51:14

நடிகை கீர்த்தி ஷெட்டி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் நடிப்பில் கடந்த பெப்ரவரி மாதம் வெளியான உப்பென்னா திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியடைந்தது. 100 கோடி ரூபாய் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு அதிகளவில் படவாய்ப்புகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர் தனது சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.