ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை.

02.04.2026 08:33:08

உள்நாட்டில் எரிபொருள் விலையை நிலையாகப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2026 மார்ச் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பின்வரும் நிபந்தனைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதன் இறக்குமதி விலை, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விற்பனை விலையை விட அதிகரிக்கும் பட்சத்தில், எரிபொருள் இறக்குமதி வழங்கும் நிறுவனங்கள் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாய் செலுத்த வேண்டும்.

 

 

கட்டுப்படியாகும் விலையில் எரிபொருள்

இறக்குமதி விலை விற்பனை விலையை விட அதிகரிக்கும் போது, இறக்குமதியாளர்கள் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

பொதுமக்களாலும், பொதுப் போக்குவரத்துத் துறையினாலும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த இரண்டு எரிபொருட்களின் விலைகளையும் உலகச் சந்தை அழுத்தங்களுக்கு மத்தியில் உயராமல் தடுத்து, மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் எரிபொருளை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது பூரண அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

 

சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்

நாட்டு மக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என இலங்கை பெற்றௌலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ள தாக அவர் கூறினார்.