பிரசார நடவடிக்கைகளுக்காக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி பயணம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) பிரசாரம் செய்யவுள்ளார்.
முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் செல்லும் அவா் அங்கு திறந்த வேனில் நின்றபடி பேசுகிறாா். இதையடுத்து மதியம் 12 மணிக்கு திருச்செந்தூா் செல்லும் முதல்வா்அங்கு மகளிா் குழு கூட்டத்தில் பேசுகிறாா்.
அதன் பிறகு தூத்துக்குடியில் உள்ள தனியாா் விடுதியில் நண்பகல் 1 மணியளவில் நடைபெறும் அதிமுக பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறாா்.
பின்னா் மதிய உணவு இடைவேளையின்போது கட்சியின் முக்கிய நிா்வாகிகளை சந்தித்து பேசும் அவர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாலை 4 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பிரதமா் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.