நாடாளுமன்ற பொதுமக்கள் கூடத்தை மீளத் திறப்பது குறித்து ஆராய்வு

17.10.2021 02:48:21

நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் கூடத்தை மீள திறப்பது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஆராயப்படும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாடாளுமன்ற பொதுமக்கள் கூடம் இந்த ஆண்டு திறக்கப்பட மாட்டதென அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 பரவலை கருத்தில் கொண்டு கட்சி தலைவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வர் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்தார்.