
உள்ளூராட்சி தேர்தல் 187 வாக்குகளுடன் நிறைவேறியது!
18.02.2025 14:00:00
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களின்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்தவொரு வாக்கும் பயன்படுத்தப்படவில்லை. |
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 2 சரத்துகள், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. |