சமையல் எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும் – லசந்த

29.11.2021 06:28:18

சமையல் எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும்  என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவுடன் தொடர்புடையதாக தீப்பரவல் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக் களம் அவதானம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச பகுப்பாய்வுத் திணைக் களத்தின் விசேட குழுவினர் சென்று இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.

அதேநேரம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரி வாயுவுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகின்றன.


கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு மாதிரிகளை பரிசோதிக்க அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏழு மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள சமையல் எரிவாயு மாதிரி களும் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.