பெருமழையால் வெள்ளக்காடானது சூடான்

23.09.2021 17:12:08

ஆப்பிரிக்க நாடான சூடானில் மழை வெள்ளத்தால் மொத்தமுள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடாகின. அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

சூடான் அகதிகள் ஆணையத்தின் மூத்த தலைவர் இப்ரஹிம் முகமது தெரிவித்து உள்ளதாவது:
சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சூடானில் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளன. அங்கு அகதிகள் உட்பட 2.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தெற்கு சூடானில் 4.26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 

ஆண்டுதோறு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சூடான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 140 பேர் இந்த காலகட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தனர். இந்த ஆண்டு இதுவரை மழை, வெள்ளத்தால் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 35,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.பலர் வீடுகள் இல்லாமல் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு புதிய தங்குமிடத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

 

'சூடானில் ஏற்கெனவே வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வாழும் மக்கள் இன்னும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்துள்ளனர். முகாம்களில் மலேரியா தொற்று பரவி வருகிறது. 150 அகதிகளுக்கு மலேரியா உறுதி செய்யப்பட்டு உள்ளது' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.