நாட்டின் நலனுக்காக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார்

08.04.2024 07:37:30

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அல் காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு பின் நிருபர்களிடம் பேசிய இம்ரான்கான்,‘‘ நாடு இப்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

நாட்டின் நலன்களுக்காக யாருடனும் வேண்டுமானால் பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக இருக்கிறேன். முன்னாள் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா உடனும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப்(பிடிஐ) கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அரசாங்கத்தின் அதிகாரமிக்க பதவிகளில் உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.