அர்விந்த் கேஜ்ரிவால் குறித்து பஞ்சாப் முதல்வர் கவலை!

16.04.2024 07:51:51

”சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திஹார் தெரிவித்துள்ளார்.

 

திஹார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துவிட்டு வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்  என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதியை பிடித்தது போல் அவரை திஹார் சிறையில் அடைத்துள்ளனர். பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?
வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பா.ஜ.கவின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இப்படி நடத்தப்படுவது ஏன்? நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம்” இவ்வாறு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திஹார் தெரிவித்துள்ளார்.