மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்!
14.03.2026 14:59:24
|
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டார். |
|
இலங்கை நீதித்துறை சேவையில் விசேட தர (Special Grade) அதிகாரியான இவர், பல வருடங்களாக நீதித்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். முன்னதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. |