அவுஸ்ரேலிய தாக்குதல்- ஜனாதிபதி அனுர கண்டனம்!

15.12.2025 14:31:05

அவுஸ்ரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு எக்ஸ் செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என்று ஜனாதிபதி கூறினார்.