அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

18.04.2024 09:07:43

எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் களுத்துறை மற்றும் அளுத்கடை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை மோசமாக நடத்துவது மற்றும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற இரண்டு சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளியான இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

சில நபர்கள் இதுபோன்ற அநாகரீகமான நடத்தையில் ஈடுபடுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

அத்துடன் இவர்களின் செயற்பாடுகள் நாட்டின் நற்பெயருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.