பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

03.12.2025 14:26:39

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தத் தொகை ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் டித்வா சூறாவளியின் தாக்கம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன.

மேலும் 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை இடைநடுவில் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.