பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

26.07.2024 08:00:00

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினா் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இந்த கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

மேலும் அவர் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவிற்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.