பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் மூடப்படுகின்றன!

29.11.2021 06:42:15

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் படிப்படியாக மூடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய , நாடு முழுவதும் பதிவான சீரற்ற காலநிலையால் திறக்கப்பட்ட 26 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் படிப்படியாக மூடப்படுகின்றன.


நாடு முழுவதும் நேற்று மாலை பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதாகவும், இதனால் வான் கதவுகள் படிப்படியாக மூடப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் டி அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.