எரிபொருள் முனையத்திற்கு அமைச்சர் திடீர் விஜயம் !
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (21) கொலன்னாவ எரிபொருள் விநியோக முனையத்திற்கு சோதனை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் மேலதிக திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சர் நேற்று மாலை கொலன்னாவ எண்ணெய் சேமிப்பக முனையத்திற்கு சென்றுள்ளார்.
இதேவேளை, நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் இராணுவ அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏறி பொருள் தாங்கிகள் நடமாட்டம் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
எரிபொருள் தாங்கி சாரதிகள், உதவியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது தேவைகள் தொடர்பில் அமைச்சர் பல தீர்மானங்களை மேற்கொண்டார்.