நக்சலைட்டுகளுடனான மோதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஐவர் உயிரிழப்பு !

04.04.2021 10:00:37

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் பத்து வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிஜபுர் டர்ரெம் அருகிலுள்ள காட்டுப் பகுதியிலேயே இன்று இந்த சண்டை நடைபெற்றுள்ளது.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாகவுள்ள நிலையில், அவர்கள் அங்கு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில், பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.