தேசியத்தலைவர் மற்றும் பொட்டு அம்மான் குடும்பத்தினருக்கு வீரவணக்க நிகழ்வு.

30.05.2025 09:59:37

உணர்வெழுச்சியுடன் தேசியத்தலைவர் மற்றும் பொட்டு அம்மான் குடும்பத்தினருக்கு வீரவணக்க நிகழ்வு. 
_________________________

18/05/25  ஜேர்மனி Köln நகரில் நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்களும், தமிழீழம் வேண்டிப் போராடிய போராளிகளும் ஒன்றுகூடிய முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள் நிறைவாகியது.

முற்பகல் 11.00மணிக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வோடு ஆரம்பமாகி,
தமிழீழத் தேசியத் தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவரண் தளபதி பொட்டு அம்மானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  பேராற்றலோன் குமரன் போன்றவர்களின் திருவுருவப் படங்களிற்குத் தீபமேற்றி மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
 
2024 மே18 டென்மார்க்கில் தலைவரின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம் முதலாவது வீரவணக்க நிகழ்வை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக 2025,மே18 யேர்மனியில் இரண்டாவது வீரவணக்க நிகழ்வு வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அறிவரண் தளபதி பொட்டு அம்மானுக்கும் அவரது மனைவி பிள்ளைகளுக்கும் போர் முடிவுற்றுப் 16வது ஆண்டு கழித்து முதல்முறையாக அவர்களின் வீரமரணத்தை, அவருடன் களமாடியவர்கள், இணைந்து செயற்பட்ட போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரின் முன்னிலையில்
அறிவித்துத் தீபமேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

கண்ணீரோடும் கனமான நினைவுகளோடும் சிறப்புரைகள், விடுதலைப் பாடல்களுடன் நிகழ்வு சிறப்புற முன்னெடுக்கப்பட்டது. 

இசைப்பறவை கரோலின் தாயகப்படல பாட நிகழ்ச்சி உணர்வோடு தொடர்ந்தது.

நிகழ்வில் நிறைவில் துளசிச்செல்வன் எழுதிய "பேராற்றலோன் குமரன்*, சாந்தி நேசக்கரம் எழுதிய 
அறிவரண் தளபதி பொட்டு அம்மான் போன்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்வில் மாவீரர் துவாரகா விருது நேசக்கரம் சாந்தி அவர்களிற்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் குடும்பத்தினரால்  வழங்கப்பட்டது.
அவரது துணிச்சலான ஊடகசெயற்பாட்டிற்காகவும் எழுத்துலகில் சாதித்தவைகளிற்காகவும் மாவீரர் துவாரகா "முதல் குரல்" The first voice"விருது வழங்கப்பட்டது. 

இவர் கதை கவிதை நாவல்கள் என்று எழுத்துலகில்  செயற்படுவதோடு உயிரணை,நிழற்குடை, கட்டுநாயக்கா வெற்றித் தாக்குதல்,மற்றும் அறிவரண் தளபதி பொட்டு அம்மான் போன்ற நூல்களை வெளியீடு செய்துள்ளார்.

பார்த்திபன் பதிப்பகம், பார்த்திபன் கலையகம் என்பவற்றை உருவாக்கி பல கலைப்படைப்பு களையும்  வெளியீடுகளையும் செய்துவருகிறார்.

 நேசக்கரம் மீடியா, நேசக்கரம் ரீவி போன்ற UTube தளங்களில் காலத்தின் தேவையை வலியுறுத்தியும் மாவீரர்கள் நினைவுகளை மக்களிடம் சேர்க்கவும் உழைத்துக்கொண்டிருப்பவர்.

டென்மார்கில் நிகழ்ந்த தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முதலாவது வீரவணக்கம் செலுத்தும் நிகழ்விற்கு ஊடக உறுதுணையாக செயற்பட்டது மட்டுமல்ல நேரடிபங்களாராகவும் செயற்பட்டவர்.

2009 May 18 இற்கு பின்னர் கட்டியமைக்கப்பட் பொய் கோட்டைகளில் உச்சமாக தமிழினத்தின் ஆத்மாவை காயப்படுத்திய, போலிப்பெண்ணின் பொய் முகத்திரையை கிழித்து, உண்மைகளை ஆதாரத்துடன் வெளியிட்டார்.
அத்தோடு உள்ளிருக்கும் சதி நோக்கங்களை உடனுக்குடன் மக்களிற்கு தெளிவூட்டியதோடு, போலிப்பெண்ணை சட்டத்தின் முன்னிறுத்தி தொடர்ந்து வரவிருந்த பேராபத்துகளைத் தடுத்த துணிவுகரமான செயலைச் செய்தார்.

மேற்குறிப்பிட்ட தகைமை மற்றும் செயலுக்காக இந்த விருது திரு.வேலுப்பிள்ளை மனோகரன் அவர்களால் 18/05/25 அன்று தமிழ் இன உணர்வாளர்கள் முன்னிலையில் வழங்கப்படுகிறது