
சூர்யா 45 படத்தில் இணைந்த நாயகி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். |
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வண்டலூர். பின், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் என தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்சேஷனல் ஹிட் படத்தின் நாயகி ஒருவர் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். அந்த நடிகை வேறுயாருமில்லை, மலையாள ஹிட் படமான ஆலப்புழா ஜிம்கானா திரைப்படத்தின் நாயகி அனகா ரவி தான். |