பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்!

19.05.2025 08:28:23

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து  பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இறுதி யுத்ததில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.