ஈரானிய கப்பல் இன்னமும் கொழும்பு கடற்பரப்பில்!
|
ஈரானுக்குச் சொந்தமான IRIS புஷேர் கப்பலை இன்னும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். |
|
நேற்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், குறித்த கப்பல் தற்போது கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஈரானுக்குச் சொந்தமான கப்பல் கொழும்பிற்கு அருகில் 9.5 கடல் மைல் தொலைவில் உள்ளது. அதனை நாம் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அதன் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக அவ்வாறு கொண்டு செல்ல முடியாதுள்ளது. இதற்காகத் தேவையான தொழில்நுட்ப உதவியை தனியார் நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுள்ளோம். அந்தத் திருத்தப் பணிகளின் பின்னர் கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். |