குஜராத்தில் தீவிரமடைந்து வரும் புதிய வைரஸ்

18.07.2024 08:04:04

குஜராத்தின்  சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது.

இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் தற்சமயம் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

 

இந்த வைரஸ் நுளம்பு, மற்றும் சில பூச்சிகளின் மூலம் பரவுவதோடு, காய்ச்சல் அறிகுறிகளோடு மற்றும் மூளை அழற்சியை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுமார் 44,000க்கும் அதிகமான மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோனையில் 14 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.