பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்.

10.03.2026 15:30:19

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt,, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார்.

இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, அந்த ஆதரவை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாமத்திய கிழக்கின் போர் நிலைமை குறித்து இலங்கையின் நிலைப்பாட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி  Siri Walt,  நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் (அரசியல்)Justine Boillat  இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.