ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

08.10.2021 15:39:27

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர், உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவிப்பை அடுத்து 29,137 சமையலர்கள், 24,576 சமையல் உதவியாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.