நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – பல புகையிரத சேவைகள் இரத்து!

05.08.2022 10:25:02

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

இலங்கை புகையிரத திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

உடரட புகையிரத வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் சில இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.