வெளிநாடுகளுக்கான தபால் கட்டணங்கள் எகிறியது !
31.07.2022 02:34:38
விசேட வர்த்தமானி அறிவித்தல்
வெளிநாட்டு தபால் கட்டணங்கள் மற்றும் பொதிகள் சேவைக்கான கட்டணங்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு தபால் கட்டணங்கள் திருத்தம்
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் திணைக்களத்தின் செலவுகளை கருத்திற்கொண்டு வெளிநாட்டு தபால் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருத்தப்பட்ட கட்டண பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது