சிவகார்த்திகேயன்.. ஹெச்.வினோத் இயக்கத்தில்நடிக்கிறாரா?

04.07.2024 07:07:00

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முகுந்த வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறுதான் அந்தப் படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனும், ஹெச்.வினோத்தும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. Vijay sethupathi: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி -நித்யா மேனன் ஜோடி.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி! சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் மினிமம் கியாரண்டி என்ற உறுதி இருப்பதாலும், வியாபாரமும் கையை கடிக்காமல் நடப்பதாலும் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் இருக்கிறார்கள். மேலும் இப்போது சிறுவர்கள், சிறுமிகள் மத்தியில் சிவகார்த்திகேயன் டாப்பில் இருக்கிறார். எனவே இயக்குநர்களும் சிவாவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார்கள். அமரன்: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதற்கு முன்னதாக வெளியான மாவீரனும் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்த கையோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சிவாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை பரிசளிக்கும். ஏனெனில் ரங்கூன் படத்தின் மூலமே ராஜ்குமார் பெரியசாமி தான் ஒரு நல்ல இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். எஸ்கே 23: இதற்கிடையே சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. அவர் எடுத்த படங்கள் அத்தனையும் அட்டர் ப்ளாப் ஆகின. அவரது நிலைமையை பார்த்த ரசிகர்கள், அட நம்ம முருகதாஸுக்கா இந்த நிலைமை என பரிதாபத்தில் உச் கொட்டுகிறார்கள். எனவே இப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுக்க முருகதாஸ் காத்திருக்கிறார். சிவாவின் கேரக்டர்?: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதேசமயம் ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், தன்னுடைய கரியரில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு சிங்கநடை என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.