இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

06.04.2024 09:22:38

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களில்  அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.